Tuesday, December 29, 2009

அக்கரை பச்சை!



என் நான்கு வயது குழந்தை 
கிழிந்த நூலாடையை சேலையாக 
உடுத்திக்கொண்டு_தன்னை
பெரிய மனுஷியாக பாவித்து
மகிழ்கிறாள்!!!!!!
அவளுக்குத் தெரியுமா?
என் குடிகார கணவன்,
எகிறும் விலைவாசி,
இரண்டுமாத வீட்டுவாடகை,
இவற்றையெல்லாம் மறந்து
நானும் குழந்தையாய் மாறத்
துடிக்கும் என் ஏக்கங்களை?

3 comments:

  1. நானும் குழந்தையாய் மாறத்
    துடிக்கும் என் ஏக்கங்களை?///

    இயல்பான ஏக்கங்களை அருமையா சொல்லிருக்கிங்க தோழி

    ReplyDelete