Showing posts with label அக நாழிகை. Show all posts
Showing posts with label அக நாழிகை. Show all posts

Wednesday, February 17, 2010

வீரியம் யாதென....



உனது கடின வார்த்தை
பிரயோகித்தலில்
நீரினுள் அமிழ்த்தப்படும்
பொருளினால் மேலெழும்பும்
நீர்குமிழ் போல்
உனக்கான பதிலடிகள்
எழுந்தமர்கின்றன.....

மறுநொடியில் எதிர்வரும்
பின்விளைவுகளை
பிரித்தாராய்ந்து சிறு
புன்னகை உதிர்க்க
எத்தனிக்கையில்
அதுவும் உன்னை
ஆத்திரப்படுத்தும் என
யோசித்தேன்....

உனது நோக்கம் என்னை
காயப்படுத்துதலேயன்றி
காரணிகளை
நியாயப்படுதுதல் அல்ல
என அறிந்து
ஒரு கண்ணீர்துளியை
விட்டுச் சென்றேன் ...

அது உன்னை
திருப்தி படுத்தகூடும்...
உன் உதட்டோர
குறுநகையை
வரவழைக்க கூடும்...

(எனது கவிதை வெளியிட்டமைக்கு நன்றி -அக நாழிகை)