Sunday, October 17, 2010

கனவின் நிறம் !!



நீள் பாதையில் பூத்திருக்கும்
பெயர் தெரியா பூக்கள்
பறக்கும் மேகம்
உதிரும் நட்சத்திரம்
கருஞ் சிவப்பில் உலகம்

பெரும் நகரத்தினுள்
வழி தொலைத்து
அலைந்து திரிந்து
தேடலின் போது கண்
விழித்துக் கொண்ட தருணம்..

சர்ப்பங்கள் பிணைந்த காடு
நீரினில் மிதக்கும் நிலவு
காசுகள் புதைந்த நிலம்
பிணங்கள் குவிந்த சாலைகள்
என
நடு இரவினில் திறக்கும்
கனவுச் சிறையினில்
பல பல கனவுகள்
வர்ணம் தீட்டி
விடுபடுகின்றன..
சிறு கவிதைக்கு
வித்திட்டுச் செல்கின்றன...