Wednesday, June 20, 2012

ஊடல் எனும் மையப்புள்ளி !!


விருப்பு வெறுப்பு என்ற
விளிம்புகளற்ற நம் வாழ்க்கை பாதையில்
ஏதோ ஓர் மையப் புள்ளியில்தான்
நம் ஊடலை இனிதே தொடங்கினோம்..

சுவற்றில் எம்பி விழும் பந்தைப் போன்றே
எதிரெதிர் சொற்களால் தெறித்து
தூர விழுகிறோம்..

திரும்பி வர தயங்கியபின்
கூடலில்லா ஊடலுடன்
எனக்கான பாதையில் நான்!
உனக்கான பாதையில் நீ!

ஏதோ ஓர் விசையின் உந்துதலில்
நின்றபின் உனக்கும் எனக்குமிடையேயான
தூரம் மலைக்க வைத்தது..

எங்கோ தூரத்தில் ஆரம்பித்த
ஊடலின் மையப்புள்ளி
வெறும் காற்றும் புகா சிற்சிறு புள்ளியே
என உணரும் தருணத்தில்
வாழ்வின் மீதிகள்
காத்திருப்பதில்லை அல்லது
மிச்சமிருப்பதில்லை..!!

2 comments: