சில பொழுதுகள்
தனிமைப் படுத்தப்படுகின்றன.
செய்திகள் பகிரப்படாமல்
துக்கங்கள் நிகழப்படாமல்
மிக நெருக்கமானவர்களின் வருகையின்றி
எவ்வித விசாரிப்புகளின்றி
வெற்றிடமாய்
தீண்டாமலே கிடக்கின்றன..
எவ் வித சஞ்சலமும் சலசலப்பும்
தாரா நாட்கள் சௌகரியம்.
மகிழ்ச்சியின் சோகத்தின் தருணங்களை
நினைவு கூர்வதை போல
ஏதும் நிகழா பொழுதுகளை
எவரும் நினைக்க நினைப்பதில்லை..

very true and its a reality ....good one hemi...:)
ReplyDelete