
தேட இயலாத பெருங்கூற்றினை
தேடித் திரிந்தாள்..
அது தன்னால் மட்டுமே முடியுமென
நகைத்தாள்....
பின்வரும் யாதொரு நாள்
தன் சுயம் வெளிப்படும் எனவும்
தரணியில் தன் புகழ் விரியு மெனவும்
சொல்லி சொல்லி சிறகு விரித்துப்
பறந்து கொண்டிருந்தாள்...
நாற்திசையில் எய்தஅம்பினால்
குருதி ஒழுகுவதையும் கவனிக்க தவறினாள்
கைகள் கட்டி தான் பாதாளத்தில்
வீழ்வது போல் கனவு கண்டிருந்த வேளையில்
தன் பிம்பம்தனை தொலைத்ததாக
சொல்லிப் புலம்பினாள்
அந்த பின்வரும் யாதொரு நாளில்
தன் சுயத்தை முழுவதுமாய்
இழந்திருந்தாள்!!!
No comments:
Post a Comment