ஓர் ஜனனம் அதன் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருக்கும்!
ஓர் மரணம் அதன் விண்மீன்
விழுந்து கொண்டேயிருக்கும்!
ஓர் காதல் அதன் கைகள்
பிணைந்து கொண்டேயிருக்கும்!
ஓர் காமம் அதன் ஜுவாலை
எரிந்து கொண்டேயிருக்கும்!
ஓர் விதை அதன் மரம்
சுமந்து கொண்டேயிருக்கும்!
ஓர் வனம் அதன் கருமை
படர்ந்துகொண்டேயிருக்கும்!
ஓர் மனிதன் அவன் மனிதம்
மரித்துக் கொண்டேயிருக்கும்!
ஓர் உலகம் அதன் உருவம்
அழிந்து கொண்டேயிருக்கும்!!!!

No comments:
Post a Comment