Tuesday, January 10, 2012

ஓர் துரோகம் ஓர் மன்னிப்பு !



சிறுக சிறுகச் சேகரித்த
சுமைகளைக் கொண்டு ஓர்
துயரக் கூட்டினை கட்டியிருந்தேன்
நான்!!!

போகிறப் போக்கில் ஓர்
பெருந் துரோகத்தை
வீசி விட்டிருந்தான்
அவன்.....

ஏமாற்றங்களை உதிர்த்துக் கொண்டே
கண்ணீர்களை கொண்டு நிரப்பினேன்
அக் கூட்டினை..

பெருங் கூச்சலிட்டபடியே இருந்தன
துரோகமும் வன்மமும்...
சிறிதும் பெரிதுமாய்
புலம்பல்கள் ...

பின் நீண்டிருந்த நேரந்தனில்
விசும்பல்கள் வெதும்பியபடியே
உறங்கிப் போயின....
நிசப்தம் தளும்பிய சமயத்தில்
எட்டிப் பார்த்தேன்

ஓர் மன்னிப்பு துளிர் விட்டிருந்தது..
நான் பார்த்து விட்டிருந்த கணத்தில்
நிர்மூலமாகியிருந்தது அக்கூடு!!

No comments:

Post a Comment