Sunday, October 23, 2011

உறவில்லா உறவுகள்!!!



நண்பகலில் நடந்த ஓர்
முரண்பட்ட ரகசியத்தின்
வெளிச்சமாய்
அன்றிரவு அந்த அறை
கோபங்களாலும் ஊடல்களாலும்
நிரம்பி வழிந்தது...

வாதங்களாலும் சலசலப்புகளாலும்
வெப்பமுற்றிருந்தது அவ்வறையின் இரவு

மறுநாள் திறந்த
சன்னற் கதவுகளில்
வெளியேறியது சூடான காற்று...
கூடவே கழிந்தது
முன்னிரவின்
வெக்கங் கெட்ட வார்த்தைகளும்
உண்டான ரணங்களும்....

மீண்டுமொருமுறை
வேகமாய் சாத்தப்பட்டது
சன்னற் கதவுகள்
பின்பு திறக்கப்படவேயில்லை
ஆகினும் சன்னல் இடுக்கின் வழியே
வார்த்தைகளும் சூடான காற்றும்
மெலிதாய் கசிந்து கொண்டேயிருந்தன
நசுங்கியபடி!!!!

6 comments:

  1. ஒரு ஊடலை, ஒரு வருத்தத்தை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. mr 2009 tamil
    kindly gimme that link..so that i come to know whether i commented or not for that post..plz do it immediately

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete