
நமது நெடுந்தூர
பயணத்தின் போது
விடுபட்ட வார்த்தைகளை
மிச்சமிருந்த சிநேகங்களை
ஒற்றை வரியில்
ஒரு நிலா பொழுதில்
அலைபேசியில்
அனுப்பி வைத்தாய்...
"ஐ மிஸ் யு" என...
உனக்கான காதலை
அழகாய்தான் புரிய வைத்தாய்
குறுந்தகவலில்...
உன் அடுத்த அழைப்பில்
என்ன பேசுவது என
தெரியாமல் நான்
வெக்கப்பட்டுக் கொண்டிருந்த
சமயம்...
உனது அழைப்பு
கண் சிமிட்டியது என்
அலைபேசியில்...
nice nice.., hmm akka miss u...
ReplyDeletethank u bala ...
ReplyDeleteநல்லா இருக்கு..
ReplyDeletethank u arumukam.....
ReplyDelete