
இரு கண்கள் விரிந்து
சிறு விரல் அசைத்து
மழலையினுள் எழும்
வியாக்கானங்கள்...
காதலன் காதலியை
உருவகப்படுத்தும் படிமங்களும்....
எதுகையில் பிடித்து
மோனையில் கோர்த்து
நீளும் கவிதைகளென..
நிலாபொழுதினில்
நினைவூட்டபடும்
நிலவினுள் நிலவும்
பாட்டியை பற்றியதாகினும்..
கடன் கேட்டோ கொடுத்தோ
கழிப்பவரின் வருகையை
சாத்தப்பட்டேயிருக்கும்
கதவும் அதன் இடுக்குகளில்
மறைக்கப்பட்ட உண்மைகளும்...
ஊர்ஜிதப்படுத்துகின்றன....
வகையான பொய்கள்
வரவேற்கவேபடுகின்றன
எப்பொழுதும் யாராகினும்..
No comments:
Post a Comment